
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இப்படம் அதிகாரபூர்வ அறிவிப்பு தான் இன்னும் வரவில்லை.இதற்கிடையே விஜய்யின் திரைப்படத்தை பல இயக்குநர்கள் முயற்சி வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
அதன்படி கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் விஜய்யிடம் ஒரு கதை சொன்னதாகவும், அது அவருக்கு பிடித்திருந்தாகவும், வருங்காலத்தில் வாய்பிருந்தால் அவருடன் படம் பண்ணுவேன் என தெரிவித்து இருக்கிறார்.
Tags:
cinema news