பருத்தித்துறையில் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் தேடுதல்..!!!


பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , பருத்தித்துறை பொலிஸாரினால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் பாவனைகள் மற்றும் விற்பனைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோப்ப நாயின் உதவியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்.

பருத்தித்துறை சந்தை, முச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள், மந்திகைச் சந்தை, மந்திகை வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் எவையும் கைப்பற்றப்படவில்லை.


Previous Post Next Post


Put your ad code here