யாழில் பிரபல பாடசாலையில் ஆசிரியரின் தாக்குதலில் மாணவன் பாதிப்பு..!!!


யாழிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம்10 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(18.11.2022) வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாது,

குறித்த மாணவனை தடிகளால் பலமுறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அறைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here