நயினை நாகபூசணியால் யாழ் சத்திரசிகிச்சை கூடத்திற்கு புதிய இயந்திர உபகரணம்..!!!
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்திற்காக புதிய இயந்திர உபகரணம் இன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு சத்திர சிகிச்சைப் பிரிவின் தேவைக்காக ஒன்பது இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா [975,000/-] பெறுமதியான குறித்த உபகரணத்தை கொள்வனவு செய்யத்தேவையான நிதியினை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினால் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் டாக்டர் யமுனானந்தாவிடம் நேற்றைய தினம் 17ஆம் திகதி கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.