யாழில் போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட மூவர் கைது..!!!





யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரினால் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது, 19 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் 18 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, தமக்கு, மல்லாகம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

அதன் அடிப்படையில் மல்லாகம் சென்ற பொலிஸார், 36 வயதுடைய பெண்ணொருவரை 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Put your ad code here

Previous Post Next Post