யாழில்.குடைக்குள் வாளை மறைத்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு..!!!


குடைக்குள் வாளை மறித்து எடுத்து வந்து வீதியில் சென்ற இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை தபால் கட்டை சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீதியில் இளைஞனொருவர் நடந்து சென்றுகொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் ஒன்றில் குடையினுள் வாளை மறைத்து எடுத்து வந்த இருவர் , இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here