Thursday 24 November 2022

அரியாலையில் திருடப்பட்ட மாடு ,தொண்டமனாற்றில் மீட்பு..!!!

SHARE

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடொன்று தொண்டமனாற்று பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 21ஆம் திகதி மாடொன்று திருடப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்படிருந்தது.

இந்நிலையில், தொண்டமனாறு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் மாடொன்று மறைத்து கட்டப்பட்டிருந்த நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மாடு அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடு என கண்டறிந்துள்ளனர். அத்துடன் மாட்டினை திருடியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த மாட்டினை இறைச்சியாக்கும் நோக்குடனையே பற்றைக் காட்டிற்குள் கட்டப்படிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.


SHARE