கிளிநொச்சியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து – 22பேர் காயம்..!!!


கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (05) அதிகாலை 4.45 மணியளவில் விபத்து இடம்பெற்றது.

பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி இரணைமடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

காயமடைந்த 22 பேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.




Previous Post Next Post


Put your ad code here