
வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்றரை மாதக் குழந்தை ஒன்று எரிந்து உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கொட, அம்பத்தல பகுதியில் உள்ள வீடொன்றில் ஹீட்டர் வெடித்ததில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த மற்றுமொரு குழந்தை ஹீட்டரைப் பயன்படுத்தியது என்றும், ஹீட்டர் வெடித்த போது தாய் வீட்டில் இல்லை என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
ஹீட்டர் வெடித்ததையடுத்து குழந்தை இருந்த கட்டிலில் தீப்பிடித்து அறைக்குள் தீ பரவியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news