யாழில். குழந்தை உயிரிழப்பு..!!!



தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்த பின்னர் நீண்ட நேரமாக குழந்தை எழும்பாததால் , குழந்தையை தாயார் சென்று பார்த்த வேளை குழந்தை அசைவின்றி காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here