யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண்ணின் சடலம் மீட்பு..!!!


யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இன்று மாலை 4 மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அதனை மீட்பதற்காக நீதிமன்றின் உத்தரவை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னரே தகவல் வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here