கிளிநொச்சியில் வாள்வெட்டு மோதல்: ஒருவர் பலி..!!!


கிளிநொச்சி - உருத்திரப்புரம் - சிவநகர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் ஒருவர் பலியானார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கின் போது ஏற்பட்ட கருத்து மோதலை அடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இந்த மோதல் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here