கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்களை சம்பந்தப்பட்ட திகதிக்கு மறுநாள் வந்து கடவுச்சீட்டைப் பெறுமாறு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவுத் திணைக்களத்தின் இணைய முறைமையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை சரிசெய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒருநாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.