Tuesday 7 February 2023

கிளிநொச்சியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!!!

SHARE


கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் நெல் உலர விடுவதனால் குறித்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்ததாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்று நீண்ட நேரத்தின் பின்பே பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் உடலத்தை ஏற்றி செல்ல பொலிசார் அனுமதித்த பின்பே விசாரணைகளை ஆரம்பித்ததாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


SHARE