யாழ். நிலாவரையில் திடீரென வந்த புத்தர் சிலை..!!!


புத்தூர், நிலாவரையில் திடீரென வந்த புத்தர் சிலையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக புத்தர் சிலை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், பிரதேச சபையின் தலையீட்டையடுத்து, இன்று சனிக்கிழமை பகலில் இந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது.



Previous Post Next Post


Put your ad code here