Monday 20 March 2023

இந்த வார ராசிபலன் 20.03.2023 முதல் 26.03.2023 வரை..!!!

SHARE


மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவாக நடந்து கொள்ளக் கூடாது. வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை, தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனை, என்று பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். ஆனால், குடும்பத்தில் பிரச்சனைகள் இருக்காது. குடும்பத்தில் மன நிம்மதி இருக்கும். எப்போதுதான் வீட்டிற்கு வருவோம் என்று மனம் ஏங்கும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். வெளியூர் பயணம் நன்மையை கொடுக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். தினம் தோறும் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று மூன்று தோப்பு காரணம் போட்டு வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோர்வு தரும் வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. ஆனால் சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாமல் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். தூக்கம் தூக்கமாக வரும். உடல் உபாதைகள் இருக்கும். இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல் பட மனதை அமைதிப்படுத்தி, தியானம் செய்யுங்கள். காலை சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். எல்லாம் சரியாகிவிடும். மற்றபடி வேலை செய்யும் இடத்திலும் சொந்தத் தொழிலிலும் நல்லது நடக்கும். இல்லத்தரசிகள் சமைக்கும்போது கூடுதல் கவனம் எடுத்து சமைக்க வேண்டும். காயம் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் வீட்டில் காலை விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். வரக்கூடிய செலவுகளை சமாளித்து விடுவீர்கள். சேமிப்பு கொஞ்சம் கரையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மனபாரம் குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். சண்டை சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பொருட்களை நீங்கள் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். தினமும் முருகர் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றினால் நன்மை நடக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். நிம்மதியான தூக்கம் கெடும். பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் கொஞ்சம் கஷ்டப்படுவீர்கள். ஆனால் அனுபவம் சிறந்த பாடம் அல்லவா, வாழ்க்கைக்கு தேவையான புதிய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள். அது உங்களை நல்வழியில் நடத்திச் செல்லும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பிக்கள் பிடுங்ங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். பேராசை காட்டி பேசுபவர்களிடம் பழகாதீர்கள். தினந்தோறும் அம்மன் கோவிலுக்கு வாசம் நிறைந்த பூக்களை வாங்கிக் கொடுப்பது நன்மை தரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மன கசப்பான விஷயங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் எதிர்பார்த்தவர்கள் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவ மாட்டார்கள். பிடித்தவர்கள் உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வார்கள். ஆகவே, மனிதர்களை முழுமையாக நம்பாதீர்கள். கடவுளிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விடுங்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடிய சீக்கிரம் தாய்நாடு திரும்பக் கூடிய நேரம் வந்துவிட்டது. எதிர்ப்பாலின நட்பு கூடாது. பிரச்சனை எவ்வளவு வந்தாலும் நேர் வழியில் நடப்பது நன்மை தரும். இந்த வாரம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம். தினமும் காலை எழுந்தவுடன் பெரியவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் வாங்குவது நன்மை தரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கு மீறி செலவு இருக்கும். மாத இறுதியில் பண பற்றாக்குறை ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்க ஒரு வழியை அந்த ஆண்டவன் நிச்சயம் காட்டிக் கொடுப்பான். அடுத்த மாதம் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். இந்த வாரம் நீங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நபரின் பிரச்சினையில் தலையிடக்கூடாது. வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வீட்டு சாப்பாடு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்க. ஜங்க் ஃபுட்டை தவிர்த்து விடுங்கள். அளவோடு மூன்றாவது நபரிடம் பழக வேண்டும். தினம் தோறும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு நல்லெண்ணெயில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். அரசாங்க வேலைகள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடந்து முடியும். குழந்தைகளின் மூலம் மனநிறைவு பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த சண்டை சச்சரவு நீங்கும். அன்னியோன்யம் அதிகரிக்கும். தவறான நட்பு கூடாது. புதிய நட்போடு பழகுவதுவதாக இருந்தால் ரொம்பவும் கவனம் தேவை. உடல் உபாதைகள் அதிகரிக்கும். உடனடியாக மருத்துவரை அணுகவும். செல்லப்பிராணிகளை வளர்த்தால் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தினம்தோறும் நரசிம்மர் கோவிலில் ஐந்து நிமிடம் அமர்ந்து தியானம் செய்தால் நன்மை நடக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கக்கூடிய வாரமாக தான் இருக்கும். ஆனால் சிக்கல்களை சரி செய்வதற்கு நண்பர்கள் உறவினர்கள் என்று வரிசை கட்டி நிற்பார்கள். நீங்கள் உதவி என்று யாரிடமும் போய் கேட்க வேண்டாம். தானாக வந்து உங்களுக்கு உதவி செய்து பிரச்சனைகளை சரி செய்து விடுவார்கள். எல்லோருடைய நல்ல மனதையும் புரிந்து கொள்ளக்கூடிய நேரம் இது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். வெளி ஆட்களை நம்பாதீர்கள். பயணத்தின் போது கூட புது மனிதர்களிடம் அனாவசியமாக பேசாதீர்கள். நம்பி மோசம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதியதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நல்ல சம்பளத்தில் நல்ல பதவியில் வேலை கிடைக்கும். தினமும் அரச மரத்தை மூன்று முறை வலம் வந்தால் நன்மை.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சில பேருக்கு வீண்விரயம் ஏற்படலாம். மருந்து மாத்திரை ஆஸ்பத்திரி இப்படிப்பட்ட செலவுகளை தவிர்க்க முடியாது. வியாபாரத்தில் சின்ன சின்ன எதிர்ப்புகள் இருக்கும். உங்கள் கடைக்கு பக்கத்தில் புதுசாக போட்டிக்கு கடையை ஆரம்பிப்பார்கள் கவலைப்படாதீங்க. விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். புதியதாக சொத்து சுகம் வாங்குவதற்கு நல்ல நேரம் இது. ஆன்லைன் பிசினஸ் தலை தூக்கும். கமிஷன் பிசினஸ் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி இருக்கும். தினம் தோறும் யாராவது ஒருத்தருக்கு அன்னதானம் செய்தால் மேலும் நன்மைகள் நடக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனம் அதிகம் தேவை. யாரையும் சுலபமாக நம்பி விடக்கூடாது. உங்கள் கூடவை இருப்பவர்கள் கூட, உங்களுக்கே குழி பறிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. நெருங்கிய நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் என்று எல்லோரிடமும் உஷாராக பழகுங்கள். ரொம்பவும் பர்சனல் விஷயத்தை மூன்றாவது மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடாதீங்க. பரிதாபப்பட்டு அடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய உதவி பிறகு உங்களுக்கே ஆப்பு வைத்து விடும். முதலீட்டில் அதிக கவனம் தேவை. முன் பின் தெரியாத விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். நஷ்டம் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் துர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நன்மை தரும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு நிதானம் தேவை. பொறுமை தேவை. அவசரம் கூடவே கூடாது. செல்வமும் செல்வாக்கும் உயர்ந்து கொண்டே செல்ல செல்ல எதிரிகளும் அதிகமாகிக் கொண்டே இருப்பார்கள். எல்லா வகையிலும் சிக்கல்கள் உங்களை வட்டம் கட்டும். அலட்சியமாக இருக்காதீங்க. அடுத்தவர்களை அதிகமாக நம்பும்போது இழப்பு உங்களுக்கு தான். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நேர் வழியில் சென்றால் பிரச்சனை இருக்காது. குடும்பத்தோடு முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக அமையும். எந்த வேலையை எப்போது செய்தால் நல்லது நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். எல்லாவற்றையும் பிளான் செய்து வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடன் பாராட்டைப் பெறுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிக்க கூடிய வேலையை தொடங்குவீர்கள். பயணங்களின் போது கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். ஹெல்மெட் போடாமல் சீட் பெல்ட் போடாமல் வண்டி ஓட்டாதீர்கள். பெரிய பெரிய காயங்கள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. உஷாராக இருந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.
SHARE