வடமராட்சி அம்பன் பகுதியில் விபத்து – தந்தை பலி : மகள் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பன் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி மணல் ஏற்றி வந்த கனரக வாகனமும் , பருத்தித்துறையில் இருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் தொடர்புடைய கனரக வாகன சாரதியைப் பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தில், வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த 44 வயதான சின்னையா கணேசசிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். அவருடன் பயணித்த அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




Previous Post Next Post


Put your ad code here