யாழ் பல்கலை ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத்தலைவராக பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் நியமனம்..!!!


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை(25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்ட நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here