எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்..!!!



நாட்டில் அடுத்த சில தினங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிப்பிரிவு உயர் அதிகாரியின் நடைமுறைச் சாத்தியமற்ற தீர்மானத்தினால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

காசோலை கொடுப்பனவுகளுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் முகாமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில் பணம் செலுத்தினால் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுமென நிதிப் பிரிவின் உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான தீர்மானங்களால் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் நேற்று போயா விடுமுறை தினம் என்பதால் வங்கிகளில் காசோலைகளை பணமாக மாற்றிக்கொள்ள முடியாமற்போனமையையும் விநியோகஸ்தர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here