வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள்
ஜீவன் தியாகராஜா – வடக்கு மாகாணம்
அனுராதா யஹம்பத் – கிழக்கு மாகாணம்
கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட – வடமேல் மாகாணம்