சாதாரண தர, உயர்தர பரீட்சை கால அட்டவணையில் மாற்றம்..!!!



2024, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சை கால அட்டவணைகளை மாற்றவுள்ளதாக கல்வியமைச்சு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2023 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருந்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here