மற்றொரு பஸ் விபத்து; ஒருவர் பலி, 15 பேர் காயம்..!!!


வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பேபுஸ்ஸவிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், எதிர்திசையில் சீமெந்து ஏற்றி வந்த லொறியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகளே காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்கள் தற்சமயம் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here