யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயற்படும் யாழ்கோ நிறுவனத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டுயாழ்கோ நிறுவன பண்ணையாளர்கள் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
திருநெல்வேலியில் உள்ள விவசாய திணைக்கள அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது
யாழ்கோ நிறுவனத்தின் தலைவர் திருமதி மோகனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதோடு
சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் , வடமாகாண கால்நடை அபிவிருத்தி திணைக்களபணிப்பாளர் வைத்தியர் சிவகுருநாதன் வசீகரன்,
நல்லூர் பிரதேச செயலர், ஆகியோர் கலந்துகொண்டு பண்ணையாளர்கள் பணியாளர்களை கௌரவித்தனர்
கடந்த 20 வருட காலமாக யாழ்கோ நிறுவனத்துடன் தொடர்பை பேணிவரும் 50-ற்கும் மேற்பட்ட பண்ணையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.