
யாழ்ப்பாணம் அரியாலை - புங்கன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த விபத்து இன்றையதினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா என்கிற குடும்ப பெண்ணே உயிரிழந்தார்.
காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டே குறித்த உயிரிழப்பு இடம்பெற்றது.
குறித்த பெண் புகையிரத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.