வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (16)கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும், ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும், ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.