கிளிநொச்சியில் கோரவிபத்து; ஒருவர் பலி; தப்பிச்சென்ற வாகனம்..!!!



கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று(16) இடம்பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்ற நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கு நின்றவர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
Previous Post Next Post


Put your ad code here