யாழில். ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் முதியவர் கைது ; வான் ஒன்றும் மீட்பு..!!!



யாழ்ப்பாணத்தில், ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முதியவரிடம் இருந்து, ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 70 வயதுமிக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here