யாழில் குழந்தை பிறந்து 20 நாட்கள் கடந்த நிலையில் தாய் எடுத்த விபரீத முடிவு..!!!



யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தாய் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அவர் தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here