கொத்து, சோற்றுப் பொதிகளின் விலைகள் அதிகரிப்பு..!!!


எரிவாயு விலை உயர்வுடன் பல வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, ஒரு கோப்பை தேநீர் விலை 10 ரூபாவினாலும், கொத்து பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here