நீர்வேலியில் டிப்பர் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு..!!!




ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீது டிப்பர் மோதியதில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலி இராசவீதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் நீர்வேலி மேற்கைச் சேர்ந்த தனபாலசிங்கம் மகேஸ்வரி(வயது - 72) என்ற ஐந்து பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்தவராவார்.

நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வில் குறித்த பெண் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் எதிரே நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் மோதியதில் அவ்வாகனம் மோதித் தள்ளியதில் அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here