மனைவி என பெண்ணொருவரை ஆள்மாறாட்டம் செய்து இத்தாலி அழைத்து செல்ல முற்பட்ட யாழ்.வாசி கைது..!!!


மனைவி என பெண்ணொருவரை ஆள் மாறாட்டம் செய்து இத்தாலி அழைத்து செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இத்தாலி செல்ல முற்பட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் இத்தாலியில் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

யாழ்ப்பாணம் வரும் போது தனது மனைவியின் கடவுசீட்டுடன் வந்து , மனைவியும் தன்னுடன் யாழ்ப்பாணம் வந்தது போன்று , போலியான பயண சீட்டுக்களை தயார் செய்தும் , கடவுசீட்டில் உள்நுழைவு முத்திரையை போலியாக பதிந்த்தும் உள்ளார்.

பின்னர் அந்த கடவுசீட்டில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண்ணை இத்தாலி அழைத்து செல்ல முற்பட்ட வேளை , கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், அதிகாரிகள் கடவுசீட்டை பரிசீலித்த போது , அவர்களிடம் மோசடிகள் அம்பலமாகியுள்ளது.

அதனை அடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here