யாழில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!!


இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள விமான படையினரின் விமான தளத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

அதன்போது, இந்திய அமைச்சருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவும் வருகை தந்தது.

குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை பார்வையிட்டதுடன், நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் யாழ் பொது நூலகம் ஆகியவற்றிக்கும் சென்றனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையையும் (SBI) திறந்து வைத்தார்.|


















Previous Post Next Post


Put your ad code here