இரண்டு நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்..!!!


இரண்டு, மூன்று நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here