மின் மீள் விநியோகம் பற்றி தற்போதைய அறிவிப்பு..!!!



“சேதமடைந்த முதன்மை மின் விநியோக அமைப்பு மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் மின்பிறப்பாக்கிகள் தற்போது கணினியில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தடைபட்ட மின் விநியோகத்தை சீரமைக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகும்” என்று இலங்கை மின்சார சபையின் ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மின் விநியோக முதன்மை பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (டிசெ.9) மாலை 5.10 மணி முதல் நாடுமுழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here