இலங்கை வானில் திடீரென தோன்றிய அதிசயம்: ஆர்வத்துடன் பார்த்த மக்கள்..!!!


இலங்கை வானில் நிலாவை சுற்றி பாரிய வளைய வடிவிலான ஒளி வட்டம் தோன்றியுள்ளது. இதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வத்துடன் உற்று நோக்கியுள்ளனர்.

இந்த ஒளி வட்டம் இன்றைய தினம் (22.12.2023) மாலை சுமார் 7.00 மணி முதல் நாட்டின் பல பாகங்களிலும் தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முழு வட்டப் பரிமாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும், வளிமண்டலத்தில் ஈரப்பதம் அல்லது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகரிக்கும் போது, தெளிவான வானத்திலும், நிலவு நன்றாக இருக்கும் நாளிலும் இவ்வாறான ஒளி வட்டம் தோன்றும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here