யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!!


மின்சாரத் தொகுப்பு பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(12.12.2023) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மாதகல் காட்டுப்புலம், மாதகல் குசுமாந்துறை, மாதகல் இறங்குதுறை, ஜம்புகோளப்பட்டினம் ஓய்வு விடுதி, மாதகல் அந்தோனியர் கோவிலடி, சில்லாலை, வடலியடைப்பு, அரசடி, இடும்பன், ஜம்புகோளப்பட்டினம், காஞ்சிபுரம், பண்டத்தரிப்பு, சாந்தை, சில்லாலை,சித்தங்கேணி, சுழிபுரம் வைரவர் கோவிலடி, வேலுப்பிள்ளை கடையடி, பிரான்பற்று திருமண மண்டபம், பாரதி வீதி- கம்பர்மலை, பழைய பொலிஸ் நிலையம்- வல்வெட்டித்துறை, வல்வெட்டித்துறை சிவன் கோவில் வீதி, வல்வெட்டித்துறை வன்னிச்சி, வல்வெட்டித்துறை வீதி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here