
சிலாபம் - ஆராச்சிகட்டுவ மய்யாவ ரயில் கடவையில் இன்று(19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டர் சைக்கிளில் பயணித்த 36 வயதான தாய் மற்றும் 09 வயதான சிறுவன், 06 வயதான சிறுமி ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பகுதியில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த ரயிலிலுடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலதிக வகுப்பிற்கு சென்ற பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் முந்தல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆராச்சிகட்டுவ பகுதியை சேரந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.