யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது..!!!


யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றங்களினால் பிடியானைகள் பிறப்பிக்கப்பட்ட வர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 301 நபர்களும் , சாதாரண பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 230 நபர்களுமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here