
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் ட்ரோன் கமரா பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்றைய தினம் சனிக்கிழமை (10) ட்ரோனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரினை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.0000