ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களின் இயக்கங்களினால் சில சமயங்களில் ஒருசில கிரகங்களின் சேர்க்கைகள் பல ஆண்டுகளுக்கு பின் நிகழும். அவ்வாறு நிகழும் கிரக சேர்க்கைகள் அனைத்து ராசிகளிலுமே ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் ஒரு அரிய சேர்க்கை சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது.
அதாவது கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணித்து வருகிறார். அதேப் போல் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் தான் சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்தார். இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழையவுள்ளார். இதனால் கும்ப ராசியில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
இம்மாதிரியான திரிகிரக யோகமானது 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளதால், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையிலும், தொழில் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி, சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல நல்ல செய்திகளைப் பெறக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். செல்வம் பெருகும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரியன் மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகம் தொடர்பாக பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். வியாபாரிகளின் திட்டங்கள் நல்ல வெற்றியைப் பெறும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக தந்தை இக்காலத்தில் மிகவும் ஆதரவாக இருப்பார்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சூரிய மற்றும் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். செய்யும் காரியங்கள் மற்றும் வேலைகளில் வெற்றி கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண முதலீடு தொடர்பான திட்டங்கள் வெற்றி பெறும். சிலர் இக்காலத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
Tags:
Rasi Palan