மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகள்.!!!



தற்போதுள்ள எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், நேற்று (29) நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.
Previous Post Next Post


Put your ad code here