வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி..!!!


அதிவேகமாக பயணித்த பொலிஸாரின் முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் குறித்த விபத்து இன்று (13) இடம்பெற்றுள்ளது.

கடலுக்குள் விழுந்த முச்சக்கரவண்டி பெரும் முயற்சிக்கு பின்னர் இழுத்து வெளியே கொண்டுவரப்பட்டது.

விசாரணைக்காக சென்ற கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post


Put your ad code here