திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்..!!!


களுத்துறை மாவட்டத்தில் திடீரென வாந்தி ஏற்பட்டு சுகயீனமுற்ற நிலையில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப தலைவரான கணவர் , வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (27.03.2024) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Previous Post Next Post


Put your ad code here