சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு குறைப்பு..!!!


மின்சார கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை, இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here