யாழில் இளம் குடும்பப் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு..!!!



இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாதகல், சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது-37) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி. தென்மேற்கு பிரதேசசபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வருகின்றார். அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
Previous Post Next Post


Put your ad code here