யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!


உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புனித நகர்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோணேஸ்வரராசா நிசாந்தன் (வயது-34) என்பவரே உயிரிழந்தவராவார்.

அவருக்கு உடலில் கட்டு இருப்பதாகத் தெரிவித்து கடந்த புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தர விட்டார்.

உடற்கூற்று பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவா மேற்கொண்டார்.

இதன்போது கிருமித்தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here