யாழ்.இளைஞனை வெளிநாடு அனுப்புவதாக 50 இலட்சம் மோசடி செய்த பெண் கைது..!!!


யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி , 50 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் இருந்து 50 இலட்ச ரூபாய் பணத்தினை மானிப்பாய் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

நீண்ட நாட்களாகியும் இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காத நிலையில், இளைஞன் தனது பணத்தினை திருப்பி கேட்ட வேளை , அதனை கொடுக்க மறுத்ததால் , இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணை கைது செய்து , விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here