மதுபானசாலை விவகாரத்தில் தொடர்ந்தும் ஆதாரபூர்வமற்ற தகவல்கள்; சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அங்கஜன் சீற்றம்..!!!


கடந்த ஆட்சிக்காலத்தில் நாம் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து பெற்றுக்கொண்டதாக பல்வேறு தரப்புகளாலும் முன்வைக்கப்படுகிற ஆதாரபூர்வமற்ற தகவல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (17) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர்,

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு அதன் அடுத்தபடியாக பாராளுமன்ற தேர்தலை நோக்கி நாடு நகர்ந்து செல்கிறது. இந்நிலையில் என் மீதும் எனது தந்தையார் மீதும் பழி சுமத்தும் நோக்கில் சிலர் எந்த விதமான ஆதாரமுமற்ற வீண் குற்றச்சாட்டுகளை தமது சுயலாப அரசியல் தேவைகளுக்காக முன்வைத்து வருகின்றனர்.

இந்த ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது யார் என பார்த்தால் கடந்த காலத்தில் எம்மோடு நேரடியாக போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களே இவ்வாறான பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகளும், எமது சமூக சேவைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களுமே இவ்வாறு பொய்யாக வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர்.

இவ்வாறானவர்களின் அர்த்தமற்ற பேச்சுகளுக்கு பதில் கூறவேண்டிய தேவை எமக்கில்லை. ஆனாலும் நம் மக்களை தெளிவுபடுத்தவேண்டிய தேவை நமக்குண்டு. அதனால்தான் சத்திய கடதாசி ஊடாக நாம் எமது ஆதாரங்களை முன்வைத்து, புதிதாக எந்த ஒரு மதுபானசாலை அனுமதியையும் அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு நிரூபித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.





Previous Post Next Post


Put your ad code here