யாழில், உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு..!!!

உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஜா என்ற 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.

காய்ச்சல் காரணமாகக் குறித்த யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டு 10 நாட்களாக தொடர் சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சைபலனின்றி அவர் உயிரிழந்தார்.
Previous Post Next Post


Put your ad code here