யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(24) உயிரிழந்துள்ளார்.

இதில் சங்கரத்தையைச் சேர்ந்த ஸ்ரீகாந்தராசா சிவாஸ்கரன் (வயது 34) என்ற ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு கடந்த 21 ஆம் திகதி காய்ச்சலுடன் சத்தி ஏற்பட்டதனை அடுத்து மறுநாள் சங்கானைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அன்று மாலையே குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். குறித்த நபருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு அறிவுறுத்தினார். உடற்கூற்றுப் பரிசோதனையில் எலிக் காய்ச்சலின் காரணமாக மரணம் சம்பவித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here